Friday, September 2, 2011

உரையாடல்


விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தபடி நீயெனை அறிந்தபின்னும்
விழைந்தேன் நீயெனை அறிவாயென

அறிவேன் உனைநான் எக்கணமும்
அறிவாய் நீயதை இக்கணமே
மன்னிப்பாய் ஏதும் தவறிழைத்தால்
மறவேன் எந்தன் தவறுகளை

எனக்கென சிலநொடி நான்கேட்டேன்
எனக்கென முழுவாழ்வு நீதந்தாய்
நான்கேட்ட சிலநொடி கிடைக்காமல்
எனக்கென சிலநொடி நான்கேட்டேன்

பலநொடி தந்ததை உணராமல்
உனக்கென சிலநொடி நீகேட்டாய்
என்னிடம் இல்லா உன்நொடியை
எங்கிருந்து தருவேன் உனக்கென

அறியாமல் நானும் வருந்தினேன்
அறியவே உனைநான் வருத்தினேன்
அறிந்தேன் நானதை இன்றே
அறிவாயே நீயதை நன்றே

நீ வருந்த நான் விழையேன்
நீ வாழ நான் விழைந்தேன்
உணர்வாய் நீயென் வாழ்வென
இதற்குமேல் உன்னிடம் சொல்ல என்ன ??

No comments: