சிந்தை மயக்கும் மழைச்சாரல்
கார்முகில் எனக்கின்று தந்ததே
சிந்தியது நீர்த்துளியோ இல்லை
கார்க்கோடல் மலரின் தேனோ
சிந்திய தேனும் நாவில்
கார்ப்பும் கலந்தினித்தது ஏனோ
சிந்தனையில் இதையெண்ணி மூழ்கிட
கார்வையும் தனியாகப் பாடவைத்தாய்
சிந்தூரம் அணிந்த நெற்றியும்
கார்வட்டம் சுழன்றாடும் கண்களும்
சிந்தாத மணிமாலைப் புன்னகையும்
கார்த்திகை தீபமெனப் பொலிவும்
சிந்தித்து சிந்தித்து என்இதயம்
காராக்கிருகம் எனக்கே இட்டதே…
No comments:
Post a Comment