Sunday, June 19, 2011

உன்னை நினைக்கிறேன்…


என்னைப் பார்க்கும் தருணம் முழுதும்
உன்னை நினைக்கிறேன்.
கண்ணாடியில்…

துளிகள் மண்ணில் விழுவதைப் பார்த்து
உன்னை நினைக்கிறேன்.
மழையின்…

நிலவைப் பார்த்த சாமத்தில் நானும்
உன்னை நினைக்கிறேன்.
வானில்…

பிம்பங்கள் நீரில் தெரிவதைக் கண்டு
உன்னை நினைக்கிறேன்.
நிலவின்…

இன்னிசை செவியில் கேட்கும் வேளையில்
உன்னை நினைக்கிறேன்.
குயிலின்…

வாசம் சுவாசம் துளைக்கின்ற நிமிடம்
உன்னை நினைக்கிறேன்.
மலரின்…

உயிரும் மெய்யும் ஒன்றாய்ச் சேர்ந்திட
உன்னை நினைக்கிறேன்.
தமிழின்…

என்னை நினைக்கும் நொடிகள் எல்லாம்
என்னை மறக்கிறேன்.
உன் இதயம்…

No comments: